மூன்றாம் பாலினமாக அறிவிக்க வலியுறுத்தி அரவானிகள் கையெழுத்து இயக்கம்
அரவானிகளை மூன்றாம் பாலினமாக அறிவிக்க வலியுறுத்தி 27.06.2009 அன்று கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர்.
சாதிய அடிப்படையிலும் பாலின அடிப்படையிலும் இடஒதுக்கீடு வழங்குவது போல அரவானிகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்புக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வாக்குரிமை,சொத்துரிமை போன்றவற்றை அரவானிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
கையெழுத்துகள் பெறப்பட்ட பின்னர் பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதல்வர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அகில இந்திய அரவானிகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மய்யச் செயலாளர் பி. கஜோல் தெரிவித்தார்.
நன்றி : தினமணி 27.06.2009
Monday, June 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment